மத்திய முகாம் பொலிஸ் நிலையத்தின் இப்தார் நிகழ்வு

 

(எம்.எம்.ஜபீர்)
மத்திய முகாம் பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய இப்தார் நிகழ்வு  மத்தியமுகாம் பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எம்.எம். பத்திரண தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், நாவிதன்வெளி பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட், அரச அதிகாரிகள், பிரதேச வர்த்தகர்கள், பொதுமக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments