கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ரஹ்மத் மன்சூருக்கு கல்முனை 16ஆம் வட்டாரத்தில் மகத்தான வரவேற்பு

கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டது. 

இதன்போது கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான  கல்முனை மாநகர சபையின் கல்முனை 16ஆம் வட்டார  யானைச் சின்ன வேட்பாளருமான ரஹ்மத் மன்சூர் அம்பாரை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு அம்பாரையிலிருந்து தனது கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் கல்முனை  16ஆம் வட்டாரத்திற்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதுடன் பிரதேச மக்களினால் ஒவ்வொரு வீட்டுக்கும் முன்னாள் கல்முனை மாநகர சபையின் கல்முனை 16ஆம் வட்டார  யானைச் சின்ன வேட்பாளர் ரஹ்மத் மன்சூருக்கு மக்களினால் மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது. 













Post a Comment

0 Comments