கல்முனை ஹுசைனியா பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா

 

கல்முனை ஹுசைனியா பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியர்களின் பட்டமளிப்பும், வருடாந்த நிகழ்வும் பாலர் பாடசாலையின் ஸ்தாபகரும் அதிபருமான ஐ.எல்.அஹ்மட்லெவ்வை  தலைமையில் நேற்று அல்-பஹ்றியா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை மாநகர பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


மேலும் இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் கோட்டக் கல்வி அதிகாரி திருமதி ஏ. வீ.எப்.நஸ்மியா கலந்து கொண்டார். மற்றும் அதிதிகளாக கமு/கமு அல்-பஹ்றியா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அதிபர் M.S.M.B.  பை(B)ஸால், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மருத்துவ உத்தியோகத்தர் திருமதி கயல் விழி , ஊடகவியலாளரும் ஆசிரியருமான S.M.M. றம்சான், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.





Post a Comment

0 Comments