ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

(பாறுக் ஷிஹான்)
ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த   சந்தேக நபரை   கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(6)    இரவு   மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு  முன்பாக    வைத்து   சந்தேக நபர்    விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 4 கிராம் 770 மில்லிகிராம்  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை    விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  ஏ.டி.டி நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்   டி.சி வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்   பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில்   பொலிஸ் பரிசோதகர்   எஸ்.எம்.பி.பி.எம்   டயஸ்   தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்   எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க  பொலிஸ் சார்ஜன்டுகளான பண்டார (13443)பெரேரா (71664)  உள்ளிட்ட  பொலிஸ் கன்டபிள்களான அபேரட்ண(75812)  நிமேஸ்(90699) மசாட்சி (90616) சாரதி குணபால (19401) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
   
 பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் மோட்டார் சைக்கிள்  உள்ளிட்ட  சான்று பொருட்களுடன் காத்தான்குடி   பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்பு பட்ட சந்தேக நபர் இப்பிராந்தியத்தில் போதைப்பொருள்  முகவராக செயற்பட்டு வந்துள்ளதாக  விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments