நற்பிட்டிமுனை சமாதான பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா

நற்பிட்டிமுனை சமாதான பாலர் பாடசாலையின் 29வருட பூர்த்தி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் பாலர் பாடசாலையின் அதிபரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலக உதவியாளருமான எஸ்.எல்.ஜமால்தீன் தலைமையில்

அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நற்பிட்டிமுனை அல் கரீம் பவுண்டேஷன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சமூகசேவையாளருமான சீ.எம்.ஹலீம் (LL.B) கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கல்முனை கோட்டக் கல்வி அதிகாரி பாத்திமா நஸ்மியா சனூஸ், மற்றும் நற்பிட்டிமுனை அல்- அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.பதியூத்தீன் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைத்தனர்,


நிகழ்வில் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.







Post a Comment

0 Comments