விழிப்புலனற்றோர்களுக்கான சிநேகபூர்வ ஓசைப் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

 

(அபு அலா) விழிப்புலனற்றோர்களுக்கான சிநேகபூர்வ ஓசைப் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 

மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தினால் சிநேகபூர்வ ஓசைப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) மட்டு. விவாநந்தா மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் கே.லவக்குமார் தெரிவித்தார்.

குறித்த சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில், கொழும்பு ரத்மலான விளையாட்டுக் கழகத்துடன் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கக் கழகம் மோதவுள்ளது. இப்போட்டி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 3.00 மணிவரை இடம்பெறவுள்ளது.  

இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரெத்திணம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிபெறும் அணிக்கான பணப்பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

Post a Comment

0 Comments