வியூகம் டீவியின் உதவி முகாமையாளர் சாய்ந்தமருது ஜெ.எம்.பாஸித் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக நியமனம்!

ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக சாய்ந்தமருது முதலாம் பிரிவைச் சேர்ந்த ஜெ.எம்.பாஸித் நியக்கப்பட்ட இவருக்கான நியமனக் கடிதம் இன்று (07.08.2019) கிடைப்பெற்றுள்ளது.


ஜனாதிபதியின் விஷேட கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான மக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துவதையும், ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்கை பொதுமக்களிடம் கொண்டு செல்வதையும் நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டத்துக்காக வேண்டி சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் சாய்ந்தமருது 01 கிராமிய மக்கள் தொடர்பாடல் அதிகாரப் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் ஆலோசகர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளர் அக்கலங்க ஹெட்டியாரச்சி ஆகியோரினால் இந்த நியமனக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகத்தின் தலைவரும் மற்றும் முன்னாள் இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினருமாவார். தேசிய ரீதியில் இடம்பெற்ற இளைஞர் மாநாடுகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர்.
மேலும் இவர் கணினி போதனசிரியராக பணிபுரிகின்றார். கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

Post a Comment

0 Comments